News April 25, 2025

நடப்பாண்டில் 210 கடைகளுக்கு சீல் 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 356 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 169 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட 210 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News November 12, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், (நவ.11) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 11, 2025

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு

image

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (நவ.11) நடைபெற்றது. வாக்காளர் பதிவு அலுவலரால் நடத்தப்பட்ட இந்த வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 11, 2025

மயிலாடுதுறை வட்டத்தில் “உழவரைத் தேடி” முகாம்

image

மயிலாடுதுறை வட்டம் வரதம்பட்டு மற்றும் திருச்சிற்றம்பலம் கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் வருகிற (நவ.14) தேதி காலை 10:30 மணிக்கு உழவர் நலத்துறை திட்டத்தின் கீழ் “உழவரை தேடி” முகாம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!