News January 18, 2025
நடந்து சென்றவர் மீது வாகனங்கள் மோதியதில் துண்டு துண்டான உடல்

மதுரை மேலூர் நான்கு வழிச்சாலையில் மலம்பட்டி அருகே உரப்பு ஓட்டல் எதிர்புறம் இன்று அதிகாலை நடந்து சென்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பலியான அவர் மீது அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஏறி இறங்கியது. இதில் உடல் துண்டு துண்டாக போனது. இறந்தவர் யார் என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
தரை விரிப்பை கூடாரமாக மாற்றிய த.வெ.க.,வினர்

மதுரை தவெக 2-வது மாநில மாநாடு நடை பெறும் பாரபத்தியில் மாநாட்டு திடலில் நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் காலை முதல் மாநாட்டு திடலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தொண்டர்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு தரை விரிப்புகளை கூடாரம் போன்று அமைந்து நிழல் தேடி வருகின்றனர்.
News August 21, 2025
மதுரை த.வெ.க மாநாடு ஒரு பார்வை

▶️3000 போலீசார் பாதுகாப்பு
▶️2000 பவுன்சர்கள்
▶️1.50 லட்சம் நாற்காலி
▶️400 நடமாடும் கழப்பறை
▶️உள்ளே வெளியே செல்வதற்கு 18 வழித்தடங்கள்-12 அவசர கால வழிகள்
▶️1 லட்சம் மினரல் வாட்டர் பாட்டில்கள்
▶️zone wise 1000 லிட்டர் குடிநீர் தொட்டி
▶️400 மீட்டர் நீளத்திற்கு ராம்ப்வாக் மேடை
▶️15 முதலுதவி மையங்கள்
News August 21, 2025
மதுரையில் அதிகாலையிலேயே குவிந்த தொண்டர்கள்

பாரப்பத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க.,வின் 2-வது மாநாடு இன்று நடைபெற உள்ளது. மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொண்டர்கள் நேற்று இரவு முதலே மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்தனர். அதிகாலை முதலே ஏராளமான தொண்டர்கள் தங்களது இருக்கைகளில் இடம் பிடித்து வருகின்றனர்.