News May 14, 2024

நடந்து சென்றவர் மீது மோதிய பைக்

image

சோளிங்கர், மேல் வீராணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன். இவர் நேற்று இரவு பாணாவரம் – காவேரிப்பாக்கம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில், படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News September 3, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணி

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (03.09.2025) இரவு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணிப்பேட்டை, அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு உட்பட 18 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர உதவிக்கு 9884098100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News September 3, 2025

சாலைக்காக நிலத்தினை பத்திர பதிவு செய்த விவசாயி

image

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இன்று (03.09.2025) அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சிக்குட்பட்ட மாந்தோப்பு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கிராமத்தில் 30 வருடங்களாக வசித்து வரும் 100 குடும்பங்களின் பயன்பாட்டிற்காக, சீதாராமன் மற்றும் கன்னிகம்மாள் என்ற இருவர் தங்கள் நிலத்தை சாலையாக தானமாக வழங்கியுள்ளனர். இவர்களது சமூகப்பணியை ஆட்சியர் பாராட்டினார்.

News September 3, 2025

சிமெண்ட் சாலையை திறந்து வைத்த ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டம், புதுகேசாவரம் ஊராட்சி மாந்தோப்பு கிராமத்தில் 100 குடும்பங்களின் நீண்டகால கோரிக்கையான சாலை வசதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு இரண்டு நில உரிமையாளர்கள் 15 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். அரசுக்கு கிடைத்த இந்த நிலத்தில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் 8.62 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை ஆட்சியர் சந்திரகலா திறந்து வைத்தார்.

error: Content is protected !!