News February 18, 2025
நடத்தையில் சந்தேகம்: தாயை அடித்து கொன்ற மகன்கள்

மேட்டுடையார் பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பொண்ணுவேல் மனைவி வசந்தி (38). இவர் செல்போனில் அடிக்கடி பேசியதால் சந்தேகமடைந்த மகன்கள் இருவரும் தாக்கி உள்ளனர். இதில் மயங்கிய வசந்தியை மீட்ட உறவினர்கள், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இரு மகன்களையும் பிடித்து, ஏத்தாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (04.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 4, 2026
இரவு ரோந்து காவலர்கள் விவரம்

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் 04.03.2026 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக அணுகலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0427-2273100 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சேலம்: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்., இதை செய்யுங்க

சேலம் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க


