News June 17, 2024

நகை மோசடி செய்த பெண்ணிற்கு வலைவீச்சு!

image

மதுரை கருப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜமுனா. இவர் தெற்கு வாசல் பகுதியில் இந்திரா என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் தனது 33 சவரன் நகையை அடமானம் வைத்து 9 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பின்னர் பணத்தை திருப்பி செலுத்திய நிலையில் அடமானம் வைத்த 33 சவரன் நகையை திருப்பி தராமல் மோசடி செய்ததாக ஜமுனா அளித்த புகாரில் இந்திரா மீது நேற்று மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Similar News

News September 9, 2025

கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு திருவிழா

image

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்கா இன்று சந்தனக்கூடு உருஷ் மத நல்லிணக்க விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, இந்த நிகழ்ச்சி தொடக்கமாக இன்று மாலை உருஷ் விழாவில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு மின்சார விலங்குகளால் அலங்காரத்துடன் மேலதாளம் வாத்தியம், ஒட்டக நாட்டிய, குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து தர்காவை அதிகாலை வந்தடையும்.

News September 9, 2025

மதுரை: கொட்டி கிடக்கும் வேலைவாய்புகள்

image

மதுரை மக்களே,

▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login

▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php

▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/

▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/

மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 9, 2025

கோரிப்பாளையத்தில் இருந்து சிலைகள் இடமாற்றம்

image

மதுரை, கோரிப்பாளையத்தில் மேம்பாலம், சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் அப்பகுதியிலுள்ள 6 சிலைகள் வெவ்வேறு இடங்களில் மாற்றியமைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த கனகவேல் பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையின் போது அரசு தரப்பு இதனை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!