News December 22, 2024

நகை செய்து தருவதாக ரூ.74.75 லட்சம் மோசடி

image

ஆண்டிபட்டி, ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் சுந்தர். இவரிடம் அறிமுகமான வீரன் என்பவர் தனக்கு தெரிந்தவரிடம் தங்க பிஸ்கட் இருப்பதாகவும் அதனை வாங்கி புதிய மாடலில் நகை செய்து தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய சுந்தர் ரூ.74.75 லட்சத்தை பல தவணைகளில் 5 பேரிடம் வழங்கிய நிலையில் அவர்கள் ஏமாற்றினர். இதுகுறித்த புகாரில் குற்றப்பிரிவு போலீசார் ரேவதி, பூமிகா, வீரன் உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று (டிச.21) வழக்கு பதிவு

Similar News

News November 12, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (11.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 11, 2025

தேனி: விஷ பூச்சியால் பறிபோன இளைஞர் உயிர்

image

உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (32). இவர் நேற்று முன்தினம் அவரது தோட்டத்தில் இருந்த பொழுது விஷப்பூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது. அவரை மீட்ட உறவினர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று (நவ.10) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

News November 11, 2025

தேனி: மாடுகளுடன் தகாத உறவு.. ஒருவர் கைது

image

வருஷநாடு, சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் கர்ணன். நேற்று முன்தினம் இவரது மாட்டு கொட்டத்தில் இருந்த கேமராக்கள் திருடு போனது. கேமரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியை சேர்ந்த ஜெகன்பாண்டி (22) மாடுகளுடன் தகாத உறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்து மாடுகளை துன்புறுத்தியதும் அதனை தொடர்ந்து கேமராவை திருடியதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. புகாரில் வருஷநாடு போலீசார் ஜெகன்பாண்டியை கைது (நவ. 10) செய்தனர்

error: Content is protected !!