News November 2, 2025
நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

தங்கத்தை போன்று வெள்ளியை அடகு வைத்தும் கடன் பெறும் வசதி 2026 ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, கடனை திருப்பி செலுத்திய பிறகு அடகு வைத்த பொருள்களை உடனடியாக வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தாமதம் செய்தால், ஒவ்வொரு நாளைக்கும் ₹5,000 அபராதம் செலுத்தி வாடிக்கையாளரிடம் நகையை ஒப்படைக்க வேண்டும் என வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
SIR-க்கு எதிராக SC-யில் திமுக இன்று மனு தாக்கல்

SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் திமுக இன்று மனு தக்கல் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று திமுக சார்பில் நடந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்கிறது.
News November 3, 2025
FLASH: புதிய குண்டை வீசிய செங்கோட்டையன்

திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் புதிய குண்டை வீசியுள்ளார். அதிமுகவில் மகன், மைத்துனர், மாப்பிள்ளை தலையீடு அதிகமாக உள்ளதாக இபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக சாடினார். மேலும், தன்னால் முடியாததை முடியும் எனச் சொல்லி தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது எனவும் விமர்சித்தார். செங்கோட்டையனின் இந்த தாக்குதல் அரசியலில் புயலை கிளப்பும் என கூறப்படுகிறது.
News November 3, 2025
தெலங்கானா பஸ் விபத்து.. நெஞ்சை உலுக்கும் போட்டோ!

தெலங்கனாவின் ரங்காரெட்டியில் நிகழ்ந்த <<18183288>>பஸ் விபத்தில்<<>> சிக்கி, 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பரிதாபமாக மரணமடைந்த 15 மாத குழந்தையும், அக்குழந்தையின் தாயாரும் உயிரின்றி கிடக்கும் போட்டோ பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. பஸ் விபத்து நிகழ்ந்த இடத்தில் மரணமடைந்தவர்களின் உடல்கள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்க்க முடியாமல், மீட்பு பணியில் ஈடுபடுவோரும் தவித்து வருகின்றனர்.


