News December 24, 2025

நகைக் கடன்.. முக்கிய அறிவிப்பு வெளியானது

image

2025-ல் மார்ச் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வங்கிகளில் நகைக் கடன் அளவு இருமடங்காக அதிகரித்து வருகிறது. தற்போது, தங்கத்தின் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், நகைக் கடன் வழங்கும்போது எச்சரிக்கையாக இருக்க RBI அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நகை கடன் மதிப்பு <<18646177>>வரம்புகளை குறைக்கத் தொடங்கியுள்ளன.<<>> இதனால், அதிகளவில் கடன் பெற முடியாமல் நடுத்தர மக்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

Similar News

News December 25, 2025

கோவை மாணவியுடன் கலந்துரையாடிய PM

image

‘சன்சாத் கேல் மஹோத்சவ்’ போட்டிகளின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பங்கேற்ற PM மோடி, இளம் வீரர்களுடன் கலந்துரையாடினார். குறிப்பாக, கோவை மாணவி நேசிகாவிடம் அவர் விளையாடும் கபடி, சைக்கிள் போட்டிகளில் அதிகம் பிடித்தது எது என்று கேட்க, மாணவி துடிப்புடன் ‘கபடி’ என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய PM, வீரர்களின் உற்சாகம், தன்னம்பிக்கை இந்தியாவின் வலிமையை பறைசாற்றுவதாக குறிப்பிட்டார்.

News December 25, 2025

பயிர் இழப்பீடு வழங்குவதில் துரோகம்: அன்புமணி

image

கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து தற்போது தான் இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். போன ஆண்டுக்கே இழப்பீடு வழங்கப்படாத நிலையில், இந்தாண்டுக்கான பயிர் இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பது தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் திமுக அரசின் அலட்சியமும், துரோகமும் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 25, 2025

மகாராஷ்டிரா EX அமைச்சர் காலமானார்

image

EX அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுருப்சிங் நாயக்(88) உடல்நலக்குறைவால் காலமானார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் 1978 முதல் தொடர்ச்சியாக 8 முறை நவாப்பூர் தொகுதியின் MLA-வாக இருந்துள்ளார். ‘பழங்குடியினரின் சேவகன்’ என சுருப்சிங்கிற்கு Ex PM இந்திரா காந்தி புகழாரம் சூட்டியிருக்கிறார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், மகாராஷ்டிரா DCM அஜித் பவார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP

error: Content is protected !!