News March 22, 2024
நகராட்சியில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான இடத்தில் வேறொரு நபர் ஆக்கிரமித்து வீடு கட்ட தொடங்கியுள்ளார். இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று (மார்ச் 22) மாரியப்பன் நகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Similar News
News November 4, 2025
நெல்லை: எஸ்ஐ தொடுத்த வழக்கு; நிறுவனத்துக்கு உத்தரவு

மாநகர போலீஸ் எஸ்ஐ செல்வம் மருத்துவ காப்பீட்டுக்கு பணம் செலுத்தி வருகிறார். இவர் கால் அறுவை சிகிச்சைக்காக ரூ.2,03,873 செலவு செய்தும் காப்பீட்டு நிறுவனம் ரூ.51,580 மட்டுமே வழங்கியது. மன உளைச்சலில் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில் நஷ்ட ஈடு ரூ.30,000 மற்றும் மீதமுள்ள காப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.2,62,762 வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவிட்டது.
News November 4, 2025
தாமிரபரணி ஆற்றில் பல கோடி மதிப்பிலான சிலை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள சக்தி குளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சிலர் குளித்த போது ஆற்றில் 3 ஐம்பொன் சிலைகள் கிடந்ததை பார்த்து அவற்றை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு கொடுத்த தகவல் கொடுத்தனர். அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் இதுக்குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 4, 2025
நெல்லை: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<


