News September 6, 2025
தோவாளையில் பிரம்மாண்ட அத்தப்பூ கோலம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று (செப். 5) பூக்களுக்கு பிரசித்தி பெற்ற தோவாளை மலர் வணிக வளாகத்தில் வண்ண வண்ண பூக்களால் கிருஷ்ணன் புதூர் இளைஞர்கள் கைவண்ணத்தில் அழகிய பிரம்மாண்டமாக மகாபலி சக்கரவர்த்தி மன்னனின் உருவத்தில் அத்தப்பூ கோலம் போடப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் செல்லும் மக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
Similar News
News September 6, 2025
குமரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

குமரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News September 6, 2025
குமரி: செல்போன் தொலைந்தால் என்ன செய்யலாம்?

குமரி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 6, 2025
குமரி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு பாஜக மாநில பொறுப்பு

பாரதிய ஜனதா கட்சியின் மாநில வர்த்தக பிரிவு அமைப்பாளராக கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த சதீஷ் ராஜா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.