News February 18, 2025
தோல்வியில் முடிந்த சீமான் சமாதான முயற்சி

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்தும் விலகிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளர் இரா.மகேந்திரனை சீமான் தரப்பு சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளது. ஆனால் அதை ஏற்காத அவர், “நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன்” என தீர்கமாக தெரிவித்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் பேசி வருவதாகவும், விரைவில் இன்னும் சில முக்கிய விக்கெட்டுகள் விழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
BREAKING: செங்கையில் உடல் கருகி 3 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் இன்று கொசுவத்தியால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த கணவர் பார்த்திபன் (33), மனைவி ஜெயசித்திரா(29) மற்றும் இரண்டரை வயது குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். உடல்களை மீட்டு மறைமலைநகர் தீயணைப்புத்துறை வீரர்கள் கூராய்வுக்கு அனுப்பிய வைத்தனர்.
News March 10, 2026
செங்கல்பட்டில் இளைஞர் துடிதுடித்து பலி

செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து விட்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது திம்மாவரம் அருகில் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின் பக்கத்தில் மோதியது. இதில் தினேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News March 10, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


