News November 4, 2025
தோரணமலை முருகன் கோவிலில் நவ.5 ல் கிரிவலம்

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். இம்மாத பௌர்ணமி யொட்டி நவம்பர் 5 காலை 6 மணிக்கு கிரிவலம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை நடைபெறும் .இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்து வருகிறார்.
Similar News
News November 4, 2025
திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்எல்ஏ

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ- வாக இருந்து வருபவர் OPS தீவிர ஆதரவாளான மனோஜ்பாண்டியன் இன்று திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார். இதில் அவருடன் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.
News November 4, 2025
தென்காசி: வீடு கட்ட அரசு தரும் லோன் – APPLY!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
News November 4, 2025
தென்காசி: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<


