News August 26, 2024
தோப்பில் பதுக்கிய 300 கிலோ பீடி இலை பறிமுதல்

ராமநாதபுரம் தங்கச்சிமடம் கடற்கரை அருகே தோப்பில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், ராமமூர்த்தி நேற்று(ஆக.,25) நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது, தலா 30 கிலோ வீதம் 10 பண்டல்களில் பதுக்கிய பீடி இலை பண்டல்களை கைப்பற்றினர். கூரியர் வாகனத்தில் கொண்டு வந்து தோப்பில் பதுக்கியது குறித்து ரமேஷ் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News December 21, 2025
ராம்நாடு: 2 நாட்களுக்கு பின் கரை ஒதுங்கிய சடலம்

ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்ற மீனவர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரி செய்ய கடலுக்குள் இறங்கிய போது மாயமானார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று அவரது உடல் இறந்த நிலையில் கரையூர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது. தகவல் அறிந்த மரைன் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
News December 21, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் SBI வங்கியில் வேலை.!

ராமநாதபுரம் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 21, 2025
ராமநாதபுரம்: டூவிலர் கார் மோதி ஒருவர் பலி

இராமநாதபுரம் – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சம்பை பேருந்து நிறுத்தம் அருகே இன்று (டிசம்பர். 20) இரவு 7.00 மணி அளவில் இருசக்கர வாகனம் மீது பொலிரோ கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலே பலியானார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


