News November 1, 2025

தோனி தொடர்ந்த வழக்கு: Ex IPS மனு மீண்டும் தள்ளுபடி

image

IPL சூதாட்டம் பற்றி விசாரித்த Ex IPS அதிகாரி சம்பத் குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக TV நிகழ்ச்சியில் கூறினார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ₹100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு, சென்னை HC-ல் தோனி வழக்கு தொடர்ந்தார். இதனை நிராகரிக்க கோரி IPS அதிகாரி தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

திங்கள்கிழமை அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

image

தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு திங்கள்கிழமை முதல் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என TN அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக, முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி பொருள்கள் வழங்கப்பட இருந்தது. தற்போது, 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருள்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 1, 2025

அதிமுகவில் மீண்டும் சேர்க்க முடியாது: சீனிவாசன்

image

மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் எனக் கூறிய ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் என்று திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். செங்கோட்டையனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், அதிமுகவில் ராஜாவாக இருந்தவர் டிடிவி, ஓபிஎஸ் உடன் இணைந்து கூஜாவாக மாறியுள்ளார் என சாடினார். மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.

News November 1, 2025

‘பிஹாரி’ அவமதிப்பல்ல, பெருமை: நிதிஷ்குமார்

image

பிஹாரில் இன்னும் 6 நாள்களில் முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஹார் CM நிதிஷ்குமார் வாக்கு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிஹாரி என அழைப்பது அவமதிப்பாக இருந்த நிலையில், தற்போது பெருமையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சொந்த குடும்பத்திற்காக தான் எதுவும் செய்ததில்லை என கூறிய அவர், ஒட்டுமொத்த பிஹாரும் தன் குடும்பம் தான் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!