News November 11, 2025

தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிப்பு

image

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை, நவ.13-ம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் அவர் பெறவுள்ளார். 2 தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்டவற்றை வென்ற அவரது கலைப் பயணத்தில் செவாலியே விருது மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. தோட்டா தரணிக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News November 12, 2025

RDX எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

image

உலகின் மிகவும் ஆபத்தான வெடிபொருளான RDX (Royal Demolition Explosive), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாகும். இதில் சிறிய அளவு வெடித்தால் கூட ஒட்டுமொத்த ஏரியாவும் சிதைந்து போகும். அதே நேரத்தில் IED என்பது RDX, TXT அல்லது அமோனியம் நைட்ரேட் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு வெடிபொருள் சாதனமாகும். இந்த அனைத்து வெடிபொருள்களை ஒப்பிடுகையில், RDX மிகவும் ஆபத்தானது.

News November 12, 2025

சத்தீஸ்கரில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் தேசிய பூங்கா பகுதியில், இன்று காலையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது, மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 303 ரைபிள்ஸ், INSAS ரைபிள்ஸ், stenguns, பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News November 12, 2025

பிஹார் தேர்தல்: வாக்குப்பதிவில் புதிய சாதனை

image

பிஹார் தேர்தல் வரலாற்றில், வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக EC ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். 1951-ல் அதிகபட்சமாக 66.9% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 71% வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் வெளிப்படைத் தன்மையுடன், அமைதியான முறையில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தாய்மார்கள் தங்கள் மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!