News April 8, 2025

தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் தேதி அறிவிப்பு

image

நெல்லை கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை நெல்லை மாவட்டத்தில் 15.04.25 அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பயிற்சி பெற்ற கல்வி நிறுவன தேர்ச்சி சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் ஆதாருடன் பங்கேற்கலாம்.*ஷேர் பண்ணுங்க

Similar News

News October 13, 2025

கல்லூரி பேராசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

ஏ யூ டி மற்றும் மோட்டார் அமைப்பின் பொதுச்செயலாளர்கள் சேவியர் செல்வகுமார், செந்தாமரை கண்ணன் ஆகியோர் இன்று நெல்லையில் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்; கோரிக்கைகளை நிறைவேற்றி வலியுறுத்தி நாளை கருப்பு நிற உடை அணிந்து கல்லூரிகளில் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் 15ஆம் தேதி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் 16ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

News October 13, 2025

போராட்டத்தை தடுக்க போலீஸ் முயற்சியா? – எஸ்பி பகீர் தகவல்

image

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நாங்குநேரி அருகே மஞ்சங்குளம் கிராமத்தில் பஸ் நிறுத்தாததை கண்டித்து போராட்டம் நடத்த இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போராடும் மக்களை போலீஸ் தடுக்க முயல்வதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு கூறி வருகிறது. இது முற்றிலும் தவறானது; சட்டப்படியான போராட்டத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

News October 13, 2025

நெல்லை மின்வாரியத்தின் மழைக்கால எச்சரிக்கை

image

மழைக்காலம் தொடங்கி விட்டதால் நெல்லை மாவட்ட மின்வாரியம் சார்பில் பொது மக்களுக்கு மின் விபத்து இன்றி செயல்படுவது குறித்த விளக்கங்களை தினமும் அளித்து வருகின்றனர். இன்று விடுத்துள்ள அறிவிப்பில், வீடுகளில் உள்ள பழைய உருகிய மின் இணைப்பு கம்பிகள் இருந்தால் அவை ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே எலக்ட்ரீசியன் வைத்து பழைய உருகிய மின்கம்பிகளை உடனடியாக மாற்றி அமைப்பது நல்லது என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!