News June 6, 2024

தொழில் நஷ்டத்தால் விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை

image

திருச்சி மாவட்டம் டோல்கேட் செக்போஸ்ட் அருகே வசிப்பவர் பாஸ்கர் திருமணம் ஆகவில்லை இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த பாஸ்கர் நேற்று விஷம் அருந்தியுள்ளார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து இவரது தாய் செல்வி புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Similar News

News April 29, 2025

திருச்சி: பெண்களுக்கான இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி

image

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. குறைந்தது 8-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-40 வயதுடைய பெண்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதன் மூலம் மாதம் ரூ.15,000 வருமான கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 02/05/25 ஆகும். தொடர்புக்கு: 8903363396.

News April 29, 2025

திருச்சி: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

திருச்சி மாவட்ட மக்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்: திருச்சி எஸ்.பி- 0431-2333603, திருச்சி போலீஸ் கமிஷனர்- 0431-2332566, முசிறி டி.எஸ்.பி- 9498162695, மணப்பாறை டி.எஸ்.பி – 9443659745, லால்குடி டி.எஸ்.பி – 9498160648, திருவெறும்பூர் டி.எஸ்.பி- 9866246303, மாவட்ட குற்றப் பிரிவு- 9498178817, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு- 9498167714. மறக்காம SHARE செய்யவும்

News April 29, 2025

சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை அறிவுரை

image

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்க கூறியுள்ளது.

error: Content is protected !!