News November 10, 2024
தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில் 307 ஆப்செண்ட்

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 4 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தேர்வினை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 1197 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர், இதில் 580 தேர்வர்கள் போட்டித் தேர்வினை எழுதினர். 307 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை.
Similar News
News November 13, 2025
நாமக்கல்: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 13, 2025
நாமக்கல்லில் தனியார் நிறுவன ஷோரூமில் திருட்டு!

நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஷோரூமில் நேற்று இரவு 10:15 மணிக்கு மூடிய நிலையில் இருந்தது. இன்று காலை 9:15 மணிக்கு திறந்து பார்த்த போது, 4வது மாடியில் உள்ள மேற்கூரையை உடைத்து ஏணியை பயன்படுத்தி கீழே இறங்கி, தரைத்தள இருந்த ரூ.1,78,680 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 13, 2025
நாமக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாமக்கல் மாவட்டத்தில் மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ரங்கனூர் நான்குரோடு, புதுப்பாளையம், குட்டிக்கிணத்தூர், எலந்தகுட்டை, தாண்டான்காடு, மோகனூர், பேட்டப்பாளையம், கொளத்தூர், ஆரியூர், வளையப்பட்டி, கிடாரம், வாழவந்தி, ஓலப்பாளையம், பெரியகரசப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை நவ.14 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தகவல் தெரிவிப்பு .


