News January 20, 2025
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை – 3 பேர் கைது

பாளையங்கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ரஞ்சன் (42). இவர் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த மாதம் பீரோவில் இருந்து 1.50 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள் மாயமாகியது. போலீசார் விசாரணை நடத்தி தொழில் அதிபர் வீட்டில் பணி புரிந்த அண்ணா நகரை சேர்ந்த சுஜிதா, கோட்டூரை சேர்ந்த ஆயிஷா, பீர் ஆகிய 3 பேரை கைது செய்து நேற்று (ஜன.19) சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 11, 2026
நெல்லை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நெல்லை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
திருநெல்வேலி: மழை நேரங்களில் whatsapp-ல் உதவி!

திருநெல்வேலி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
தேர்தல் குறித்து போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதம் குறித்தும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.


