News August 2, 2024

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கை

image

2024 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 01.08.2024 முதல் 16.08.2024 வரை நடைபெறுகிறது. இதில் தகுதியுடையோர் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News October 15, 2025

விருதுநகர்: முதியவர் மீது போக்சோ வழக்கு

image

வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (70) என்பவர் அப்பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமி, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி மையத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து, நன்னடத்தை அலுவலர் விஜயலட்சுமி நேரில் விசாரித்து, பிறகு முதியவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு சாத்துார் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 15, 2025

விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டு சிறை!

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 2024ல் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போட்டோகிராபர் முருகேசன் (55) கைது செய்யப்பட்டார். இந்த போக்சோ வழக்கு ஸ்ரீவி. போக்சோ நீதிமன்றத்தில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 15, 2025

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார். விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கோரிக்கைகளாக வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!