News October 14, 2025
தொழிற்பயிற்சி நிலையங்களில் கால அவகாசம் நீடிப்பு – ஆட்சியர்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் சேர்க்கை பெற கால அவகாசம் 17-10-2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்கள் 14 முதல் 40 வயது வரை, பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்று அதில் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 14, 2025
குமரி: உங்க இடம் நீளம், அகலம் தெரியலையா??

குமரி மக்களே, உங்கள் வீடு/நிலத்திற்கு தெளிவான வரைபடம் (FMP) இல்லையா? இடம் நீளம், அகலம் தெரியாமா கவலையா? இனிமேல் அவசியமில்லை! இங்கு <
News October 14, 2025
குமரி: 1200 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்

கொல்லங்கோடு போலீசார் மிக்கேல் காலனிபுரம் பகுதியில் நேற்று (அக்.13) வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும். 1,200 லிட்டர் மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. காரில் மண்ணெண்ணையுடன் 37 கேன்களை பறிமுதல் செய்த போலீசார், கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த அமீன் (38), ஷாஜகான் (39) ஆகியோரை கைது செய்தனர்.
News October 14, 2025
குமரி: பைக் விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு

கடந்த வாரம் குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த +2 மாணவர் சுர்ஜின் (17) அவரது நண்பர்கள் அஸ்வின், ரிஜோ ஆகியோருடன் பைக்கில் செல்லும் போது வெள்ளியாகுளத்தில் மரத்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுர்ஜின் நேற்று முன் தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசார் விசாரணை.