News July 27, 2024

தொடர் உண்ணாவிரதம் எம்எல்ஏ அறிவிப்பு

image

களியக்காக்களை அருகே கோழி விளை பகுதியில் 4823 என்ற எண்ணுடைய பாருடன் கூடிய டாஸ்மாக் இயங்கி வருகிறது. இதன் அருகில் ஆலயம், கோவில், பள்ளிவாசல், மருத்துவமனை அரசு, தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நெருக்கடியான இப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரி நாளை மறுநாள் (ஜூலை-29) முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க போவதாக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

BREAKING: குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.9) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதற்கு ஏற்ப உங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது. இதேபோல் குமரி மாவட்டத்திற்கு நவ.12, 13 அன்றும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT

News November 9, 2025

குமரி: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.5 மையங்களில் இத்தேர்வு நடைபெறும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வுக்காக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News November 9, 2025

குமரி: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

image

விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் நேசமணி(62). 2020-ம் ஆண்டு இவர் அதேபகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி சுந்தரய்யா, நேசமணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!