News May 7, 2024
தொடர்ந்து 6 வது ஆண்டாக 100% தேர்ச்சி.

மேட்டுப்பாளையத்தில் நகரவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 144 மாணவிகள் நேற்று வெளியான +2 தேர்வு முடிவில் 144 பேருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வர்ஷினி 567 மதிப்பெண்களும், அர்ச்சனா 553 மதிப்பெண்களும், சூர்யா 534 மதிப்பெண்களும், ஆயிஷா அஸ்மிதா 528 மதிப்பெண்களும், பிரதீக்ஷா 525 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 6வது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 22, 2025
கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News August 22, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்!

கோவை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் , 8 மற்றும் 10-ம் வகுப்பு,ஐடிஐ, இன்ஜினியரிங்,டிகிரி, செவிலியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். SHAREIT
News August 22, 2025
பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

கோவை பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Advanced CNC, Aeronautical Structure, Multimedia போன்ற பிரிவுகளில் நேரடி சேர்க்கை 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டது. 8ம் மற்றும் 10ம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுமான தொழிலாளர் நலவாரிய அட்டை அவசியம். இலவச சைக்கிள், பாடநூல்கள், உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு என்ற 88254 34331, 9566531310 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.