News May 7, 2024
தொடர்ந்து 6 வது ஆண்டாக 100% தேர்ச்சி.

மேட்டுப்பாளையத்தில் நகரவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 144 மாணவிகள் நேற்று வெளியான +2 தேர்வு முடிவில் 144 பேருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வர்ஷினி 567 மதிப்பெண்களும், அர்ச்சனா 553 மதிப்பெண்களும், சூர்யா 534 மதிப்பெண்களும், ஆயிஷா அஸ்மிதா 528 மதிப்பெண்களும், பிரதீக்ஷா 525 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 6வது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 10, 2026
கோவை இரவு ரோந்து போலீசார் விபரம்!

கோவை மாவட்டத்தில் (10.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 10, 2026
AI பார்த்து பயப்பட தேவையில்லை: PM

“பரீஷா பே சர்ச்சா” எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது AI குறித்த கேள்விக்கு, AI (அ) போனை நமது எஜமானார்களாக ஆக்கக்கூடாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். AI-யை கண்டு பயப்பட தேவையில்லை என பிரதமர் மோடி கூறினார்.
News February 10, 2026
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

கோவை ஆட்சியர் அலுவலகம் முன், உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ₹6,000 முதல் ₹15,000 வரை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர்கள், தமிழக அரசு தங்களை புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தனர். மகளிர் உரிமைத் தொகை கேட்காமலே வழங்கப்படும் நிலையில், தங்கள் கோரிக்கையை ஏற்காததை கண்டித்து முழக்கமிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.


