News September 22, 2025
தொடரும் போதை மாத்திரை பறிமுதல்: இருவர் கைது

அரக்கோணம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் செப்டம்பர் 22ஆம் தேதி அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் ரயிலில் சென்னையை சேர்ந்த அப்துல் ரஷீத், மஸ்தான் ஆகிய இருவரும் 550 போதை மாத்திரைகள் கடத்தி வருவது தெரிந்து கைது செய்தனர். நேற்று ஐந்து பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 23, 2025
ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப் 23) நடைபெறும் இடங்கள்: ஆற்காடு நெல்,அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் ஆரணி ரோடு, தக்கோலம் பேரூராட்சி அரசு பெண்கள் மே.நிலைப்பள்ளி, அரக்கோணம் வட்டாரம் அரசு மே.நிலைப்பள்ளி குமினிபேட்டை மேல்பாக்கம், காவேரிப்பாக்கம் வட்டாரம் ராகவேந்திரா மஹால், காத்தூர் அவலூர் கீழ்மின்னல் ரத்தனகிரி கோவில் மண்டபம் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.
News September 23, 2025
ராணிப்பேட்டைக்கு வருகை தரும் விஜய்

மக்கள் சந்திப்பு பயணம் என தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் அக்டோபர் 18-ஆம் தேதி ராணிப்பேட்டைக்கு வரவிருந்த நிலையில், தற்போது அவர் அக்டோபர் 4-ஆம் தேதி ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குப் பயணம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட தவெகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
News September 23, 2025
ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப் 23)நடைபெறும் இடங்கள்: ஆற்காடு நெல்,அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் ஆரணி ரோடு, தக்கோலம் பேரூராட்சி அரசு பெண்கள் மே.நிலைப்பள்ளி, அரக்கோணம் வட்டாரம் அரசு மே.நிலைப்பள்ளி குமினிபேட்டை மேல்பாக்கம், காவேரிப்பாக்கம் வட்டாரம் ராகவேந்திரா மஹால், காத்தூர் அவலூர் கீழ்மின்னல் ரத்தனகிரி கோவில் மண்டபம் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.