News September 1, 2025
தொகுப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடம்-விண்ணப்பிக்க அழைப்பு!

சேலம் மாவட்ட அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான வெளிமுகமை நிறுவனங்கள் உரிய சான்றுகளுடன் தங்களது விண்ணப்பங்களை செப்.10 மாலை 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 415, 4-வது தளம், ஆட்சியர் அலுவலகம், சேலம்-636001 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
Similar News
News September 4, 2025
சேலம்: குழந்தைத் தொழில் 1098 உடனே புகார்!

சேலம் மாவட்ட காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மட்டுமின்றி பொதுமக்கள் சமுதாய முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழித்து குழந்தை கல்வி கற்கும் திறமையை வளர்க்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர். குழந்தை தொழிலாளர் வைத்திருந்தால் 1098 புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுத்து குழந்தையை கல்விப் பயில வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
News September 4, 2025
சேலம் விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. இருப்பினும் ஜவ்வரிசியின் விலை குறைவதால், இதன் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கின் விலையும் குறைந்து விடுகிறது. இதனால் மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலையின்றி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளின் மூலம் ஜவ்வரிசியை வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
News September 3, 2025
சேலம்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.