News March 31, 2025
தேவபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்கள் மீட்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் தேவூர் ஸ்ரீ தேவபுரீஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராணி உத்தரவின் பேரில் நிலங்களை மீட்டு, தேவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதாகைகள் வைக்கப்பட்டது. அந்த வகையில், 25,280 சதுர அடியில் (5.81 சென்ட்) நஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News May 7, 2025
தடைகள் வராமல் இருக்க இங்க போங்க

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழி.பட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
News May 7, 2025
அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போமில் TN CM HELPLINE என்ற appஐ பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதினர்களுக்கும் சேர் செய்யுங்கள்.
News May 7, 2025
நாகையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

வேதாரண்யத்தை சேர்ந்தவர் வினோத் (38). இவர் நாகை காடம்பாடியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வந்தார். வினோத் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியிடம் ஓட்டுனராக பணியாற்றினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை குறித்த காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.