News September 25, 2024

தேவகோட்டையில் ரூ. 250 கோடி நிதி மோசடி

image

தேவகோட்டையில் தனியாா் நிதி முதலீட்டு நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.10000 வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. நிறுவனத்தில் உறுப்பினா்களாக சோ்ந்த 2,500 பேரிடம் மொத்தம் ரூ. 250 கோடி வசூல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ.250 கோடி மோசடி செய்ததாக
அதன் நிா்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையினர் நேற்று சோதனை நடத்தி சீல் வைத்தனா்.

Similar News

News August 19, 2025

வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள கிராமிய பயிற்சி மையத்தில் இன்று (ஆக.19) காலை 10:30 மணி அளவில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் K.R.பெரியகருப்பன் கருத்தரங்கு பேருரையாற்ற உள்ளார். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

News August 18, 2025

சிவகங்கை: ரோந்து காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (18.08.25)  இன்று இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட  
காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்து தங்கள் புகார் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.

News August 18, 2025

சிவகங்கை: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

சிவகங்கை இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!