News June 9, 2024
தேர்வை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் 154 மையங்களில் குரூப் -4 தேர்வு நடைபெறுகின்றது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தேனி மேரி மாதா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்களின் நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
Similar News
News January 31, 2026
தேனி: 124 கிலோ புகையிலை கடத்தல்

கடமலைக்குண்டு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.30) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 124 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட முருகன் (53), பிரபாகரன் (32) ஆகிய இருவரை கைது செய்தனர்.
News January 31, 2026
தேனி: Spam Calls-க்கு இனி END CARD

தேனி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News January 31, 2026
தேனி: மனைவி மீது கணவன் தாக்குதல்

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (36). இவரது கணவர் கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி மதுபோதையில் பாண்டிச்செல்வி இடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் தனது மனைவி பாண்டிச்செல்வியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து பாண்டிச்செல்வி அளித்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் கணேசன் மீது நேற்று வழக்குப்பதிவு.


