News April 9, 2025

தேர்வு கேள்வித்தாள் திருட்டு.. என்ன தண்டனை தெரியுமா?

image

மாணவர்களின் கல்வித் திறனை அறியவே பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்க அரசு பிஎன்எஸ் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. அந்த சட்டத்தின் 4-வது பிரிவில் கேள்வித்தாள் திருட்டு மற்றும் அதை விற்பனை செய்வோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News April 18, 2025

இன்று அனல் பறக்கபோகும் RCB – PBKS போட்டி

image

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB – PBKS இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். இதனால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியம். ஆனால், சின்னசாமி ஸ்டேடியம் RCB-க்கு சொந்தமானது என்பதால், வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், PBKS வலுவாக இருப்பதால், சூழல் எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம்.

News April 18, 2025

வரலாற்றில் இன்று!

image

➤1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
➤2021 – கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியது
➤1955 – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவுநாள்
➤சிம்பாப்வேயில் விடுதலை நாள்
➤உலக பாரம்பரிய தினம்

News April 18, 2025

இது ஆரம்பம் தான்.. இனிதான் அபாயம் இருக்கு.. சு.வெ

image

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது, இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளதாக சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினார். இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சிப்பதாக கூறிய அவர், எதிர்காலத்தில் கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரின் சொத்துக்களையும் கைப்பற்றும் அபாயகரமான ஆரம்பமாகவும் இச்சட்டம் உள்ளது என விமர்சித்தார்.

error: Content is protected !!