News March 29, 2024
தேர்தல் விதி மீறல்கள் குறித்த புகார்கள் அளிக்க செயலி

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச்.29) அவருடைய எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் நடத்தை விதி (MCC) மீறல்கள் தொடர்பான புகார்களை, பொதுமக்கள் “civil investigator” செயலி (App) மூலம் அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா 18004251215 என்ற தொலைபேசி எண் மூலம் பதிவு செய்யலாம். புகார்கள் உடனடியாக பறக்கும் படை குழுக்கள் மூலம் விசாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Similar News
News November 7, 2025
கோயம்புத்தூர்: யூடியூபருக்கு சிறை

முன்னாள் தவெக நிர்வாகி வைஷ்ணவி அண்மையில் Ex.அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். அவர் கரூர் சம்பவம் குறித்து ஏஐ மூலம் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கார்த்திக் என்பவர் வைஷ்ணவிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 6, 2025
கோவை இளம் பெண்ணை இழிவு படுத்திய நபர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை கார்த்திக் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசியும் அவரை கண்டந்துண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ வெளியிட்டார். இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கார்த்திகை காவல்துறையினர் கைது செய்தனர்.
News November 6, 2025
கோவையில் பெண்ணிடம் ஆசை காட்டி மோசடி

சரவணம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் இரட்டை லாபம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தனர். பின் அவர் கோவை சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், தென்காசி சென்று மோசடி செய்த ராஜு (41), முகமது அனீப் (44), அவருடைய மனைவி அன்னு (34) ஆகியோரை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என கோவை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


