News April 5, 2024
தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு என பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் காசா எண் 347b உள்ளிட்ட பல்வேறு நிலங்களின் மீது பத்திரப்பதிவுத்துறை பரிவர்த்தனை நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி பலமுறை அரசு நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேனர் நேற்று (ஏப்ரல் 4) வைத்துள்ளனர்.
Similar News
News September 19, 2025
உடுமலையில் வேலை தேடுவோர் கவனத்திற்கு!

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது எனவே உடுமலை பகுதியில் வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 19, 2025
திருப்பூர் தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு சேவை

இந்திய தபால்துறை சார்பில் பல்வேறு சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட காந்திநகர் தபால் அலுவலகத்தில் ரயில்வே பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின் முன்பதிவு மற்றும் தட்கல் முன் பதிவுகளை செய்து கொள்ள சேவை தொடங்கப்பட்டிருப்பதாக திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
திருப்பூர்: பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது

திருப்பூர், திருமுருகன்பூண்டி அருகே பெண் ஒருவர் வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே காம்பவுண்டில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவர், பெண் குளிப்பதை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசில், பெண் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.