News April 19, 2024

தேர்தல் புறக்கணிப்பு கருப்பு கொடி போராட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தருதல் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்காததை கண்டித்தும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி ஏந்தி நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதிகளில் அமைதியற்ற நிலை காணப்படுகிறது.

Similar News

News November 28, 2025

கள்ளக்குறிச்சி: காவல்நிலையம் முன்பு திரண்ட கிராமம்!

image

கள்ளக்குறிச்சி: மேல்சிறுவள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் நேற்று (நவ.27) மாலை மூங்கில்துறைப்பட்டு இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதையறிந்த மூங்கில்துறைப்பட்டு காவலர்கள், இருதரப்பு இளைஞர்களையும் அழைத்து வந்து பேசிக்கொண்டிருக்கையில், மூங்கில்துறைப்பட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காவல்நிலையத்திற்கு வந்தனர். மேல்சிறுவள்ளூர் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவலர்கள் தெரிவித்த பின்னர் கலைந்தனர்.

News November 27, 2025

சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்பு தீவிர திருத்தம் பணியை நேரில் ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கணக்கீட்டு படிவங்களை சேகரித்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ 27)நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 27, 2025

சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம்,79-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம்(SIR) பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.இதில் கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.27) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

error: Content is protected !!