News March 19, 2024

தேர்தல் பறக்கும் படை சோதனையில் 5.77 லட்சம் பறிமுதல்

image

தேனி – மதுரை சாலையில் கருவேல்நாயக்கன்பட்டி அருகே நேற்று (மார்.18) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டியை சேர்ந்த பெருமாள் அவ்வழியே டூவீலரில் தேனிக்கு சென்றார். அவரிடம் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.5.77 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Similar News

News November 1, 2025

தேனி: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்!

image

தேனி மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக் <<>>செய்யவும். இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 1, 2025

தேனி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

தேனி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<> கிளிக் செய்து<<>> பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News November 1, 2025

தேனி: பைக் மீது டிராக்டர் மோதி இருவர் படுகாயம்

image

கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேற்று முன்தினம் அவரது நண்பர் முருகன் என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த டிராக்டர் இவர்களது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு (அக்.31) பதிவு

error: Content is protected !!