News March 18, 2024
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மாவட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரூஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் பிரியங்கா மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 2, 2025
திருவாரூர்: கிராம வங்கியில் வேலை- ரூ.80,000 சம்பளம்

தேசிய அளவில் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்து விருப்பம் உள்ளவர்கள் செப்.,21-ம் தேதிக்குள்<
News September 2, 2025
திருவாரூரில் நாளை டிரோன்கள் பறக்க தடை

திருவாரூர், நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார். இதனையொட்டி 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை ஒருநாள் திருவாரூர் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
News September 2, 2025
திருவாரூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<17592895>>பாகம்-2<<>>)