News November 18, 2025

தேர்தல் தோல்வி… மவுன விரதம் இருக்கும் PK

image

பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலியாக, நவ.20-ல், காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருக்கப் போவதாக ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பல கனவுகளுடன் அரசியலுக்கு வந்த JSP வேட்பாளர்களின் தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும், இந்த ஒருநாள் மவுன விரதம், தன்னை சுய பரிசோதனை செய்ய உதவும் எனவும் அவர் கூறியுள்ளார். 238 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட ஜன் சுராஜ், ஒன்றில் கூட வெல்லவில்லை.

Similar News

News November 18, 2025

கார்த்திகை தீப திருவிழா.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

image

தி.மலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு TN அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. டிச.3-ல் மலையில் மகாதீபம் ஏற்றப்படும் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். லட்சக்கணக்கானோர் கூடும் இந்த திருவிழாவிற்கு நெரிசலின்றி செல்ல, 4,764 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

News November 18, 2025

BREAKING: உலகம் முழுவதும் X தளம் முடங்கியது

image

பிரபல சோஷியல் மீடியாவான X தளம் உலகம் முழுவதும் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர். மாலை 5 மணிக்கு மேல் X தளத்தை சரியாக பயன்படுத்த முடியவில்லை என 10,000-க்கும் மேற்பட்டோர் இணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். சாட் என்ற புதிய வசதி X-ல் இன்று அறிமுகப்படுத்திய நிலையில், அந்த செயலி முடங்கியுள்ளது. உங்களால் X தளத்தை பயன்படுத்த முடிகிறதா என கமெண்டில் பதிவிடுங்கள்.

News November 18, 2025

21,000 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லை

image

இந்தியாவில் இன்றும் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லாத ஏராளமான கிராமங்கள் உள்ளன. சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் லடாக்கில் உள்ள மான் & மெராக் என்னும் 2 தொலைதூர கிராமங்களில் தனது சேவையைத் தொடங்கியது. செப்டம்பர் 2024 நிலவரப்படி, நாட்டில் சுமார் 21,000 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதிகபட்சமாக ஒடிசாவில் 6,000 கிராமங்களில் நெட்வொர்க் சேவை இல்லாமல் உள்ளன.

error: Content is protected !!