News March 21, 2024
தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.21) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் யாளர் பாலகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் என பலரும் கலந்து கொண்டனர்
Similar News
News October 25, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (25.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
BREAKING: கோவையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

கோவை, தெலுங்குபாளையம் கார் வாட்டர் வாஷ் நிறுவன ஊழியர்கள் ஹரிஷ், பிரகாஷ் ஆகியோர் நண்பர்களான அகத்தியன், சபா, பிரபாகரன் ஆகியோருடன் நேற்றிரவு காரில் சிறுவாணி சாலையில் பச்சாபாளையம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின்மீது மோதியதில் இளைஞர்கள் 4 பேர் பலியாகினர். மேலும், சிகிச்சையில் இருந்த பிரபாகரன் என்பவரும் இன்று மாலை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
News October 25, 2025
கோவை மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

கோவை: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!


