News March 23, 2024
தேர்தல் அலுவர்களுக்கு நாளை பயிற்சி

மதுரை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு நாளை முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்க உள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 2751 வாக்குச்சாவடிகளில் 13,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு 3 கட்டங்களாக அந்தந்த சட்டசபை தொகுதி வாரியாக உதவித்தேர்தல் அலுவலர்களால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால், அனைவரும் தவறாமல் பங்கேற்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 9, 2025
மதுரை மாவட்டத்தில் இரவு காவலர் பணி விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் 9 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 9, 2025
மதுரையில் அஜித் படம் வெளியாவதில் புது சிக்கல்

நடிகர் அஜித் நடிப்பில் நாளை நாடு முழுவதும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை ரசிகர் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள திரையரங்கத்தில் ஒரு டிக்கெட்டுக்கு 500 முதல் 250 வசூல் செய்ய வேண்டும் என திரைப்பட விநியோகம் அனுமதி பெற்றுள்ள நிறுவனம் கட்டாயப்படுத்துவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
News April 9, 2025
மதுரையில் நாளை மது கடைகள் அடைப்பு

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.10) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் மதுபானக்கூடங்கள் அனைத்தும் நாளை ஒருநாள் மூடப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.