News April 11, 2024
தேர்தலுக்குப் பிறகு கச்சத்தீவை மீட்பது உறுதி

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன்படி, நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகூர் பட்டினச்சேரியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தல் முடிந்த பிறகு கச்சத்தீவை மீட்பது உறுதியெனவும், மக்கள் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
Similar News
News September 26, 2025
நாகையில் நெடுந்தூர ஓட்ட போட்டி

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அறிஞர் அண்ணா மரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்ட போட்டி எதிர்வரும் செ.28ம் தேதி காலை நாகை மீன்வளத்துறை பொறியியல் கல்லூரி முதல் கங்களாஞ்சேரி வரை நடைபெற உள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அல்லாதவர், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 25, 2025
நாகையில் 1225 விவசாயிகள் பயன்

நாகை மாவட்டத்தில் திறக்கப்பட்டு உள்ள 54 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 8678 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1225 விவசாயிகள் பயன் அடைந்து அதற்கான தொகை ரூபாய் 18 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 25, 2025
நாகையில் நெடுந்தூர ஓட்ட போட்டி

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அறிஞர் அண்ணா மரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்ட போட்டி எதிர்வரும் செ.28 காலை 8 மணிக்கு நாகை மீன்வளத்துறை பொறியியல் கல்லூரி முதல் துவங்கி கங்களாஞ்சேரி ரோட்டில் நடைபெற உள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அல்லாதவர், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.