News January 16, 2026

தேமுதிக பிடிவாதத்தால் EPS அப்செட்

image

தேமுதிகவின் சமீபத்திய கடலூர் மாநாட்டில் கட்சி நிர்வாகிகளே எதிர்பாரத வகையில் பெரும் கூட்டத்தை பிரேமலதா கூட்டிவிட்டார். அதை காரணம் காட்டி, பாமகவை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படி கொடுத்தால், வடமாவட்டங்களில் பாமகவை கூட்டணியில் சேர்த்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என EPS கடும் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News January 30, 2026

சண்டையில் சாவு என சொல்வது குற்றமில்லை.. கேரள HC தீர்ப்பு

image

சண்டையின்போது ‘போய் சாவு’ என்று சொல்வதை தற்கொலைக்கு தூண்டியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கேரள HC தீர்ப்பளித்துள்ளது. தகாத உறவில் இருந்த இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, கோபத்தில் செத்து போ என்று கூறியதால், பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த குற்றச்சாட்டு மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைது செய்யப்பட்டவரின் தண்டனையை ரத்து செய்துள்ளது.

News January 30, 2026

துணை முதல்வராகிறாரா அஜித் பவாரின் மனைவி?

image

அஜித்பவார் விமான விபத்தில் இறந்ததை தொடர்ந்து, அவர் வகித்த DCM பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அஜித் பவாரின் மனைவியும், MP-யுமான சுனேத்ரா பவார், DCM-ஆக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களின் கோரிக்கையை சுனேத்ரா ஏற்றுக் கொண்டதாகவும், மறைந்த அஜித் பவாரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

News January 30, 2026

காங்., தனித்து போட்டியிட முடியாது: கார்த்தி சிதம்பரம்

image

தமிழ்நாட்டில் தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்கிறார்கள்; திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்., ஒரு மதச்சார்பற்ற தோற்றத்தை அளிக்கிறது என தனியார் டிவி நிகழ்ச்சியில் கூறிய அவர், பின்புற வாசல் வழியாக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.

error: Content is protected !!