News May 6, 2024

தேன்கனிக்கோட்டை: மின் வேலியால் காட்டு யானை பலி!

image

தேன்கனிக்கோட்டை அருகே சந்தனபொடி என்ற இடத்தின் அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்று(மே 5), மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. பன்றிக்காக வைத்திருந்த மின் வேலியை கடக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பலியானது. இது குறித்து தேன்கனிகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News July 5, 2025

100% மானியத்தில் காய்கறி, பழம், பயறு விதை தொகுப்பு

image

ஊட்டச்சத்து மேலாண்மை திட்டத்தில், காய்கறி, பழ வகைகள், பயறு வகை விதை தொகுப்புகளை, 100 சதவீத மானியத்தில் பெறலாம் இந்த திட்டத்தை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார பயனாளிகளும் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, அந்தந்த வட்டார தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News July 4, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட இன்றைய இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை.04) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 4, 2025

அஞ்செட்டி சிறுவன் வாயில் பீர் உற்றி கொலை

image

அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மாதேவன் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ரோகித் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதேவன் தனது நண்பர் மகாதேவாவுடன் சேர்ந்து ரோகித்தை காரில் கடத்தி சிறுவனின் வாயில் பீரை ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்து பின்னர் திருமுடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

error: Content is protected !!