News January 11, 2025
தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து மூதாட்டி பலி

ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே ஜக்கேரி பகுதியில் ஒன்னுகுறுக்கி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசப்பா மனைவி நாகம்மா 59 என்பவர் விளைநிலத்தில் அறுவடை செய்து கொண்டிருந்த பொழுது அப்பகுதிக்கு வந்த ஒற்றை யானை நாகமாவை பயங்கரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Similar News
News January 29, 2026
கிருஷ்ணகிரி: துப்புரவு பணியாளர் மர்ம மரணம்!

ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த துப்புரவு பணியாளர் சரோஜா (60). வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News January 29, 2026
கிருஷ்ணகிரி: கொடூர கணவனால் ஆசிட் குடித்த மனைவி!

சின்ன பர்கூரைச் சேர்ந்த கோகிலா (42) குடும்ப தகராறு காரணமாக கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 24-ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து விசாரித்த போலீசார் கோகிலாவை தாக்கி தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர் பலராமன் மற்றும் நாத்தனார் மகேஸ்வரி ஆகிய இருவரையும் நேற்று (ஜன.28) கைது செய்தனர்.
News January 29, 2026
கிருஷ்ணகிரி: வாழை தோட்டத்தை நாசம் செய்த ஒற்றை யானை

வேப்பனப்பள்ளி அடுத்த தமாண்டரப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை இன்று காலை ஜன-28 வனப்பகுதியை விட்டு வெளியேறி தமாண்டரபள்ளி கிராமத்தில் உள்ள ராஜப்பா என்பவருடைய தோட்டத்தில் புகுந்து வாழை தோட்டத்தை நாசப்படுத்தியது. அப்போது அங்கு சென்ற ராஜப்பா யானை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.


