News April 9, 2025
தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலி, 4 பேர் படுகாயம்

நேற்று, புலிகரையை சேர்ந்த கோவிந்தன் (60) பாலக்கோடு நோக்கி டூ வீலரில் சென்றார். கசியம்பட்டி மேம்பாலத்தில் சென்ற போது அங்கிருந்த மரத்தில் இருந்த தேனீக்கள் திடீரென அவரை கொட்டின. மேலும் அப்பகுதியில் வந்த 4 நான்கு பேரையும் தேனீக்கள் கொட்டி படுகாயம் அடைந்தனர். அனைவரும் பாலக்கோடு ஜி.ஹெச்-இல் சேர்த்த நிலையில் வரும் வழியிலேயே கோவிந்தன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 17, 2025
தர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக கோடைகால பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. இதில் தடகளம், வாலிபால், டேக்வாண்டோ, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுக்களில் பயிற்சி நடைபெறவுள்ளது. கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
News April 17, 2025
குத்தகைதாரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் சிறுகனிம குத்தகைகளுக்கான நடைச்சீட்டுகளை வருகின்ற 21.04.2025 முதல் இணையவழியில் குத்தகைதாரர்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்ளலாம். மேலும் நடைச்சீட்டுகளை அச்சடிக்கத் தேவையானப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஏ4 தாள்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரக அலுவலகத்தில் இருந்து அஞ்சல் மூலமாக குத்தகைதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
News April 17, 2025
தர்மபுரியில் அதிசய தொங்கும் தூண்கள்

தர்மபுரி அருகே கோட்டை என்ற பகுதியில் அமைந்திருக்கிறது, மல்லிகார்ஜூனேஸ்வரர் திருக்கோவில் தனித்துவமான கட்டிக்கலையின் மூலம் இந்த கோயில் புகழ் பெற்று விளங்குகிறது. கருவறையின் முன்புள்ள இரண்டு தூண்கள் தரையோடு தொடர்பில்லாமல் தொங்கிய நிலையில் உள்ளன. தூணுக்கும் தரைக்கும் இடையே உள்ள இடைவெளியில் காகிதத்தை விட்டு எடுத்து விடலாம். வியப்பை தரும் இந்த தூண்கள் தொங்கும் தூண்கள் எனப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க