News March 28, 2024
தேனி: 41 மதுபாட்டில்கள்: 2 பேர் கைது

தேனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தவசிராஜன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது காட்டுபத்திரகாளி அம்மன் கோயில் அருகே கூடலூரை சேர்ந்த ரமேஷ், வீரணன் ஆகிய இருவரும் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அருகில் இருந்த முட்புதரை சோதனையிட்டபோது, அரசு அனுமதி இன்றி விற்க வைத்திருந்த 41 மதுபாட்டில்களை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News September 18, 2025
தேனி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News September 18, 2025
தேனி: 10th தகுதி.. தேர்வு இல்லை ரூ.71,000 சம்பளத்தில் வேலை

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News September 18, 2025
தேனி: மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த தொழிலாளி

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனைக்கு, தன்னைக் கடித்த பாம்புடன் செவ்வாய்க்கிழமை இரவு வந்த கூலித் தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவா் உயிா் பிழைத்தாா். வாகனம் ஏறியதில் காயமடைந்த அந்தப் பாம்பு, சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இறந்த பாம்புடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு இரவில் வந்த சுரேஷ்பாபுவுக்கு மருத்துவா்கள் உடனடியாக விஷ முறிவுக்கு சிகிச்சை அளித்தனர்.