News January 5, 2026
தேனி: வேலை வாங்கித் தருவதாக ரூ.2.50 லட்சம் மோசடி

ஆண்டிபட்டி, டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவரிடம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த சந்திரசேகரன் (77) என்பவர், தான் ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி என்று ராம்குமாரிடம் அறிமுகமாகி அரசு வேலை வாங்கி தருவதாக, ஆவணத்தை போலியாக கொடுத்து ரூ.2.50 லட்சம் பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
தேனி பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்!

தேனி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தேனி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 04546-254368 . SHARE பண்ணுங்க!
News February 10, 2026
பணி நியமன புகாரில் டி.இ.ஓ ஆஜராக உத்தரவு

தேனி சி.இ.ஓ அலுவலகத்தில் இன்று (பிப்.10) தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நாகலட்சுமி அவரது நிர்வாக வரம்பில் உள்ள பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் பற்றி நேரடி விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையில் நாகலட்சுமி, நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும். டி.இ.ஓ. வாக பொறுப்பேற்ற 2024 அக்.10க்கு பின் கையாளப்பட்ட பணிநியமன கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
News February 10, 2026
பைக் விபத்தில் காவலாளி படுகாயம்

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (59). இவர் தனியார் சர்க்கரை ஆலையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரக்கூடிய நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது ஜெயமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி பைக் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பிரகாஷ் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு.


