News December 15, 2025
தேனி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!

உத்தமபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் கூலித் தொழிலாளி. இவர், நேற்று (டிச.14) வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் GHல் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
தேனி: பைக் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு.!

மதுரையை சேர்ந்தவர் காஜாஉசேன் (80). இவர் சில தினங்களுக்கு முன்பு உத்தமபாளையத்தில் உள்ள அவரை நண்பரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த காஜாஉசேன் மீது சுப்பிரமணி என்பவர் பைக்கை ஓட்டி வந்து மோதி உள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.
News March 4, 2026
தேனி: வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருட்டு

பெரியகுளம், வடகரை அனுமாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலாவுதீன். குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 13.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
News March 4, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று(மார்ச்.3) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவில் காவல் உதவி தேவைப்படுவோர் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம்.


