News November 25, 2025
தேனி: வகுப்பறைக்குள் சிறுவனை வைத்து பூட்டிச் சென்ற சம்பவம்

கூடலூா் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் அரசு கள்ளா் ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. இங்கு நேற்று (நவ.24) மாலை பள்ளி முடிந்து அனைவரும் வீடு திரும்பிய நிலையில் பள்ளிக்குள் மாணவர் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சென்று வகுப்பறையைத் திறந்து பாா்த்த போது 4ம் வகுப்பு மாணவா் சாமு வகுப்பறையில் தூங்கி விட்ட நிலையில் வகுப்பறையில் வைத்து பூட்டிச் சென்றது தெரியவந்தது.
Similar News
News November 28, 2025
தேனி: வாடகை வீட்டில் இருக்கீங்களா? இத பாருங்க..

தேனி மக்களே, வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்
News November 28, 2025
மீண்டும் மஞ்சள் பை விருது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் https://theni.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
தேனி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கன மழை பெய்கிறது. இந்நிலையில் தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. SHARE IT.


