News November 20, 2025

தேனி: முறுக்கு கம்பெனிக்கு சிறுவனை விற்றவருக்கு தண்டனை

image

தேனியை சேர்ந்த 6.ம் வகுப்பு படித்த 15 வயது பள்ளி சிறுவனை காணவில்லை என பெற்றோர் தேனி போலீசில் 2017.ல் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் முருகன் என்பவர் சிறுவனை பெங்களூருவில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு அழைத்து சென்று அங்குள்ள பாண்டி என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு விட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த நிலையில் தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு

Similar News

News November 20, 2025

பெரியகுளம் அருகே கார் மோதி முதியவர் படுகாயம்

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் நடுக்கருப்பையா (62). இவர் நேற்று (நவ.19) அவரது இருசக்கர வாகனத்தில் எ.காமாட்சிபுரம் பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் ஒன்று இவரது இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் நடுக்கருப்பையா படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு.

News November 20, 2025

தேனி: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

image

தேனி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 20, 2025

தேனி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா

image

தேனி மாவட்ட நூலக ஆணைக் குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து மைய நூலகத்தில் 58-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியில் இன்று வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் புலவர் ச.ந இளங்குமரன் கலந்து கொண்டு, நூல்களின் முக்கியத்துவங்கள் குறித்தும்,புத்தக வாசிப்பால் அறிவு திறன் மேம்படுவது குறித்து சிறப்புரையாற்றினார்.

error: Content is protected !!