News February 9, 2025
தேனி மாவட்ட புதிய ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமனம்

தமிழக அரசு 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இன்று பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக இருந்து வந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News March 3, 2026
தேனி: குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை.!

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் முத்துலட்சுமி (27). இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது வரை குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த முத்துலட்சுமி சில தினங்களுக்கு முன்பு விஷமருந்தி உள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.
News March 2, 2026
தேனி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தேனி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News March 2, 2026
தேனி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தேனி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


