News January 3, 2026

தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை…

image

சமூக வலைதளங்களில் வைத்திருக்கும் மற்றும் பகிரும் புகைப்படங்களை வைத்து முக மோசடிகள் அதிகரித்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News February 3, 2026

தேனி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>https://lakhpatididi.gov.in/ என்ற<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 3, 2026

தேனி: பெண்ணை விமர்சித்த அரசு வழக்கறிஞர்

image

கோம்பையை சேர்ந்த தர்மர் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் திமுக ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள மலர்விழி என்பவரை விமர்சித்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரில் தேனி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி நேற்று தர்மரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, ஓடைப்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 3, 2026

தேனி: இன்றைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

image

தேனி மாவட்டம், ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.03) செவ்வாய்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!