News March 19, 2024
தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்ட நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு தேனி மாவட்ட காவல் துறை 04546-261730, அலைபேசி எண்: 9363873078 அறிமுகப்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News October 24, 2025
தேனி: மருமகனின் வெறிச்செயல்

போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மகள் காயத்ரியை, ரஞ்சித்குமாா் (25) என்பவர் காதல் திருமணம் செய்தாா். தற்போது இந்த தம்பதி பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித்குமாா் மது போதையில் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்று மனைவி காயத்ரியுடன் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட ரவிச்சந்திரனை கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். போடி போலீசார் ரஞ்சித்குமாா் மீது வழக்கு (அக்.23) பதிவு
News October 24, 2025
வெள்ளை சாத்தி அலங்காரத்தில் காட்சியளித்த முருகன்

பெரியகுளம் தென்கரைப் பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவிலில் வீற்றிருக்கும் முருகனுக்கு சஷ்டி விரத இரண்டாம் நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முருகன் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.
News October 23, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 23.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.


